கைதடி நுணாவில் சனசமூக நிலைய திறப்பு விழா!!
கைதடி நுணாவில் சனசமூக நிலையமானது, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 28.05.2023 ) மாலை 3 .00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
கைதடி - நுணாவில் சனசமூக நிலைய தலைவர் கு. சிவகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவரும் முன்னாள் கிராம சேவையாளருமான நிரு. வி. சு. துரைராசா பிரதம விருந்தினராகவும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. செல்வராணி ஜெகதீசன் , நுணாவில் - கைதடி கிராம அலுவலர் திரு. சி. திசாந்தன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் , சமாதான நீதவானுமாகிய திரு. அ. மதன்ராஜ் , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்
வரணி மகா வித்தியாலய அதிபர் திரு. ஆ. தங்கவேல் ,. கைதடி - நுணாவில் அ. த.க. பாடசாலை அதிபர் திருமதி. சியாமளா கணராஜன், மேக்கன்ரைல் பாதுகாப்பு சபை பணிப்பாளர் - திரு. வி. சுகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்..
சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், பொது மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை