275 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் கைது!!
தென்கொரிய நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, இலங்கையில் பல இடங்களில் உள்ள நபர்களிடம் இருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கடவுச்சீட்டுகள் கண்டி, கெட்டம்பே தங்கொல்ல வீதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயத்தை சுற்றிவளைத்த போதே, மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பு தேடுதலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.
இந்த காரியாலயத்துக்கு, ஏனைய நாடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பிவைப்பதற்கான அனுமதியுள்ளது.
இருப்பினும், தென்கொரியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான அனுமதி இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை