வெளிநாட்டு பொறியியலாளர் இலங்கையில் உயிரிழப்பு!!
காலிதுறைமுகத்தில் தரித்துநின்ற அபுதாபி கப்பலின் தலைமை பொறியியலாளர் கப்பலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அபுதாபியை சேர்ந்த சரக்குகப்பலின் தலைமை பொறியியலாளர் கப்பலில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளமை குறித்து துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தில் அலெக்செஜேவே விட்டாலி என்ற லித்துவேனிய நாட்டவரே உயிரிழந்துள்ளார்.
அதிகாலையில் கப்பலின் மேற்பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தவேளை அவர் கடலில் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கடலில் இருந்து அவரை மீட்டு கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை