கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டம்!!

 


ஓமான் மற்றும் மதிதிய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சென்று சிக்குண்டிருக்கும் பெண்களை நாட்டிற்கு திருப்பி கொண்டுவரக் கோரி இன்று (01.06) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கபப்ட்டது.

வடக்கு கிழக்கு மாகானங்களின் எட்டு மாவட்டங்களிலும் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சி நகரத்தில் புதிய பேருந்து நிலையம் முன்பாக இன்று (01.06) பகல் 10 மணிக்கு வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.