தேநிலவு சென்ற தம்பதிக்கு நேர்ந்த துயரம்!!

 


இந்தோனேசியாவின் பாலி தீவில் திருமணமான ஒரேவாரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் தம்பதி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரன் மற்றும் பூவிருந்த வல்லி பகுதியை சேர்ந்த விபூஷ்னிக்கும் இடையே கடந்த 1 ஆம் திகதி சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.


திருமணம் முடிந்த கையோடு தம்பதிகள் ஹனிமூனுக்கு இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு சென்றுள்ளனர். அங்கு விரைவு மோட்டார் படகில் தம்பதி சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காலமாக காதலித்து பின் பெற்றோரின் சம்மதத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்ற திருமணம், ஒரே வாரத்தில் முடிந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.