ஜனாதிபதித் தேர்தல் காலம் அறிவிப்பு!!

  


அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை உறுப்பினர்கள், ஆளுங்கட்சித் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களை கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.


மைனஸ் நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் அதனை ப்ளஸ் மட்டத்திற்கு கொண்டு வருமாறு அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதுடன் ,கிராமத்திற்குச் சென்று எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கான பின்னணியை தயார் செய்யுமாறும் ஜனாதிபதி இங்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.