விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!!
நேற்றைய தினம் (04.07.2023) யாழ்ப்பாணம் - வரணி சுட்டிபுரம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த குடும்பஸ்தர், நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவரையாளி பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற வேளை மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் வயது 30 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர்.
மேலும் அவருக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை