அரச பேருந்தில் ஆபத்தான பொருள்!

 


யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் இ. போ. ச. பேருந்தில் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபரிடமிருந்து 4 கிலோ 160 கிராம் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சந்தேகநபரை பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.