கரை ஒதுங்கிய சடலத்தால் பரபரப்பு!!

 




யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் இறங்கு தளத்தையொட்டியதாக கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சடலம் இன்று புதன்கிழமை (19) காலை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.


அந்த தகவலின்படி, சடலமாக மீட்கப்பட்டவர், மாத்தறையை சேர்ந்த சுஜீவ அபயவர்தன விக்கிரமசிங்க (வயது 55) என்பவரே  உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் கூறிள்ளனர்.

பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தையொட்டியதாக ஆண் ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை வேளையில் கரையொதுங்கியிருந்தது.

இது தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கிரிசாந் பொன்னுத்துரையும் குறித்த இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.  



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.