மலையிலிருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்!!

 


தெல்தெனியவில் 13 வயது சிறுவன் ஒருவன் மலை உச்சியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

தெல்தெனிய, கோனவல பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,000 அடி உயர மலை உச்சியிலிருந்தே சிறுவன் தவறி வீழ்ந்ததாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திகன ரஜவெல்ல கல்கெடியாஹனேவைச் சேர்ந்த இசுரு வீரரத்ன என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிறுவனின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.