முறியடிக்கப்படும் காணி அபகரிப்பு!!
யாழ்ப்பாணம், செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும் நோக்குடன் தொடர்ந்து 4 ஆவது நாளாக இன்று (27) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.
இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்து வந்த நிலையில் குறித்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் காணி கைஅயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இதன் காரணமாக இன்றும் ஏமாற்றத்துடன் அதிகரிகாரிகள் திரும்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை