பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - 35 பேர் உயிரிழப்பு : 100 பேர் காயம்!!


பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


அப்போது திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர்.


தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 


மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

   


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.