சந்நிதி முருகன் பெருந்திருவிழா ஆரம்பம்!!

 


ஈழத்தின் வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்றையதினம் (16) மாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

முருகப்பெருமானின் கொடியேற்ற திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஓகஸ்ட் 25ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும் , ஓகஸ்ட் 26ம் திகதி கைலாச வாகனமும் , ஓகஸ்ட் 29ம் திகதி சப்பறத் திருவிழாவும் , ஓகஸ்ட் 30ம் திகதி காலை 8 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

மேலும் ஓகஸ்ட் 31ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 5 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

அதேவேளை குடாநாட்டு மக்கள் மட்டுமன்ற வெளி இடங்களில் இருந்து சன்னதி முருகனுக்கு அடியவர்கள் பெரும் திரளாக வந்து முருகனின் அருளை பெற்றுச்செல்வார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.


https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.