சித்தப்பாவால் சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்!!

 


தனது சட்டபூர்வமற்ற மனைவியின் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 18 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி காவிந்தயா நாணயக்கார 18 வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை விதித்ததுடன் அபராதமும் நஷ்டஈடும் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

குறித்த அபராதத் தொகையைச் செலுத்தப்படாவிட்டால் மேலும் மூன்று மாத கால சிறைத்தண்டனையும் நட்டஈட்டை வழங்கா விட்டால் 12 மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.

45 வயதுடைய இந்திக நிலங்க வீரசிறி என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகியதெனிய பிரதேசத்தில் கடந்த 09.12.2006 அன்று அல்லது அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.