கடலூரில் அசானிக்கு அமோக வரவேற்பு!!

 


இலங்கை சிறுமி அசானிக்கு கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் மலையக குயில் அசானிக்கு கடலூர் கிராமத்தில் மிக அபாரமான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அஷானி வெற்றி பெற வேண்டும் என்று இலங்கையர்கள் மட்டுமன்றி உலகவாழ் தமிழர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் அசானி பாடிய "என்ன சொல்ல...ஏது சொல்ல...".என்ற பாடலுக்கு பெரும் வரவேற்பு.கிடைத்தது. பாடகி சுவேதா மோகன் தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  அசானி தனது தந்தையுடன் கடலூர் கிராமத்திற்கு உறவினர்களைக் காணச் சென்ற.போது .அங்கு அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து கிராமத்தினர் கொண்டாடியுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.