பிரபல தென்னிந்திய நடிகர் விடுத்துள்ள அறிவிப்பு!
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனோடு மீண்டும் யாழ்ப்பாணம் வருவேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நேற்றையதினம் (22-10-2023) யாழில் இருந்து இந்தியாவுக்கு புறப்படும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"யாழ் கானம்" இசை நிகழ்ச்சியை முடித்து மீண்டும் சென்னையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
இந்த நிகழ்ச்சி மறக்கவே முடியாத ஒரு அனுபவம், நான் யாழ்ப்பாணம் வருவது இதுவே முதல்முறை, மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக இந்த யாழ் கானத்தை நான் பார்க்கின்றேன்.
உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பாடகர்கள் கலந்து கொண்டு பாடி இருக்கின்றார்கள்.
எதிர்காலத்திலும் யாழ்ப்பாண மக்களுக்கு இவ்வாறான நிகழ்ச்சிகள் வரும் என்பதை நான் எதிர்பார்க்கின்றேன்.
மீண்டும் அடுத்த முறை சந்திக்கும் வரை தமிழ் சினிமாவை, தமிழ் பாடல்களை எப்போதும் நேசித்துக் கொண்டே இருங்கள். ஏனென்றால் அதுவே எமக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும்.
ஒரு பாடகராக இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்பு வழங்கிய சந்தோஷ் நாராயணனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், இசைக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், நீங்கள் யாழில் எங்கு சென்று கேட்டாலும் இசைநிகழ்ச்சியில் நடந்த பிரம்மாண்டத்தை பற்றி பேசுவார்கள்.
இந்த பிரமாண்டத்தை சந்தோஷ் நாராயணன் செய்து முடித்திருக்கின்றார். அவருக்கு என்னுடைய பெரிய நன்றிகள், அடுத்த தடவை அவர் வரும்போது நானும் அவர் கூட வருவேன் என்கின்ற உறுதியை செலுத்திக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை