கனடா பயணம் - பல்கலைக்கழக உத்தியோகத்தரிடம் பணத்தை இழந்த யாழ் இளைஞன்!!
கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 21 இலட்ச ரூபாய் மோசடி செய்த பல்கலைக்கழக பெண் உத்தியோகஸ்தரும் , அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், விசாரணைகளின் பின்னர் இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொடர்பாடல் உத்தியோகஸ்தராக கடமையாற்றும் பெண்ணொருவர் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார்.
பணத்தை இழந்த இளைஞன் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறையிட்டுள்ளார். இதனை அடுத்து , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கைது செய்தனர்.
பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மோசடிச் சம்பவத்துடன் , அவரது கணவனுக்கும் தொடர்பு இருப்பதனை கண்டறிந்து கணவனையும் கைது செய்த நிலையில், இருவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
தற்போது பெருகிவரும் வெளிநாட்டு மோகம் இவ்வாறான மோசடியாளர்கள் பலருக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இவ்விஷயத்தில் அதிக அக்கறை கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை