சீன கப்பலால் அதிருப்தி அடைந்துள்ள இந்தியா!!

 


இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு இன்றையதினம் (25-10-2023) சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான "ஷி யான் 6" வந்தடைந்துள்ளது.

கப்பல் வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் கடல் ஆய்வுக் கப்பல் வருகை தொடர்பில் இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.

இருப்பினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தன.

"ஷி யான் 6" என்பது புவி இயற்பியல் ஆய்வுக்காக நில அதிர்வுத் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட ஒரு நவீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலாகும்.

இந்த கப்பல் நாரா நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடத்தவுள்ளது.

இதன்படி, "ஷி யான் 6" என்ற கப்பல் சுமார் 25 நாட்கள் இலங்கையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.