இலங்கை மருத்துவர்களின் சாதனை!!

 


அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர்கள்,  நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு  சாதனை படைத்துள்ளனர்.

  நோயாளிகள் சுயநினைவுடன் இருக்கும்போது குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை மேற்கொள்ளமுடியும்.

36 வயது சிற்பக்கலைஞரான நோயாளி சத்திரசிகிச்சை இடம்பெற்றவேளை ஓவியம் வரைந்துள்ளார், அதேசமயம் பேச்சு மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அவரது


மூளையின் ஒரு பகுதியை தவிர்ப்பதற்காக அவரை ஓவியம் வரையுமாறு வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நொச்சியாகமவை சேர்ந்த இந்த நோயாளி சத்திரசிகிச்சையின் பின்னர், எந்த வித பாதிப்பும் இல்லாமல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.