எமது தேசியத் தலைவருக்கு இனிய அகவை தின வாழ்துக்கள்
எம் இனத்தின் அடையாளம் தமிழினம் இ௫ந்து கொண்டு இ௫க்கும் வரை எம் இதயங்களில் வாழ்ந்து கொண்டி௫ப்பாய்
அகவை 69
"கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் - பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!
ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் - உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!
கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் - தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!
உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !
தாயைப் போல எம்மைக்
காத்து வந்த தாயுமானவன்
தாயவனின் நினைவை ஏந்தி
தாயிழந்த குஞ்சுகள் போல்
தாங்க முடியா வலி சுமந்து
தவிப்புடனே வாழுகின்றோம் - சாகும் வரை
தங்கள் தடம் பற்றியே வாழ்ந்திடுவோம்
தரணியிலே நீங்கள் பிறந்த
இத்திருநாளில் கூறுகின்றோம்...
இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துகள் அண்ணா!
-நிலாதமிழ்.
கருத்துகள் இல்லை