மன்னாரில் இருந்து இளம் நீதிபதி தெரிவு!!


வடமாகாணம் மற்றும் மன்னார் மாவட்ட வரலாற்றில் மிகவும் இள வயதான தமிழ் நீதிபதியாக மன்னாரை சேர்ந்த அர்ஜுன்  வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

 வில்வரட்ணம் அரியரட்ணம் - அர்ஜுன் எனும் தமிழரே இவ்வாறு பதவியேற்கவுள்ளார். புனித சவேரியார் பாடசாலையின் மாணவரான இவர் 34 வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அர்ஜுன் அகில இலங்கை ரீதியில் இவர் 14 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு பலரும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.