ஜேர்மனியின் சொகுசுக்கப்பல் இலங்கை வருகிறது!!

 


ஜேர்மனியின் Aida Bella சொகுசுக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பலானது நாளை வியாழக்கிழமை (9 ) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இக் கப்பலானது Aida Cruises நிறுவனத்தால் இயக்கப்படுகின்றது.

இலங்கை வரும் கப்பலில் ஆயிரத்து 900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளனர்.

அதோடு 13 அடுக்குகளை கொண்டுள்ள இக் கப்பலில் ஆயிரத்து 25 விருந்தினர் அறைகள், 12 மதுபானசாலைகள், 8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்களை கொண்டுள்ளது.

மேலும் Aitken Spence PLC இன் துணை நிறுவனமான Aitken Spence Shipping Ltd நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கப்பல்களை இயக்குபவர்களுக்கான சேவைகளை தொடர்ந்து வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.