பொய் சாட்சி - எழுதியவர் பூங்குழலி

 


சிறுகதை..

தனது சிறு வயது  நண்பன் என்று கூறிக் கொண்டு   முரளிக்காக மேன்முறையீட்டு வழக்கில்  பொய் சாட்சி செல்வதற்காக நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தான்  சுதன்.


அவனுடன்  சிறையில் இருக்கும் முரளி, அவனது வழக்கறிஞர் என்று மூவரும் நீதிமன்றில் வந்து அமர்ந்தனர்.


அந்த நீதிமன்றம்  சுவிற்சர்லாந்து சட்ட திட்டங்களுக்கு அமைவாக இயங்கிக் கொண்டிருந்தது.


நீதிபதி மற்றும் தட்டச்சு  இயக்குனர், மேலும் ஆலோசகர்கள் இருவர் என மூவர் நீதிபதியுடன் வீற்றிருந்தனர்.


அங்கு ஊடகவியலாளர் சிலரும் காணப்பட்டனர்.


ஆனால் பாதிக்க பட்ட தரப்பு வருகை தரவில்லை. 


குற்றவாளியை  நேரில் பார்க்க விரும்பாதவர்கள்  அதற்கான காரணத்தை  இருபத்தொரு நாட்களுக்கு முன்னர்  தீதிபதிக்கு  எழுத்து மூலம் அனுப்பி வைத்திருந்தனர்.


அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.


வணக்கம் கூறி , வருகை தந்தமைக்கு நன்றி கூறி விசாரணையை ஆரம்பித்தார் நீதிபதி.


"குற்றவாளியின் வாக்குமூலமும் சுதனின் வாக்குமூலமும் முன் பின் முரணாகக் காணப்படுகின்றது " என்று  எண்ணிய நீதிபதி,


சுதனிடம் குறுக்கு விசாரணைகளை  ஆரம்பித்தார்.


நீதிபதியின் ஆளுமையிலும்,  அனுபவத்திலும்  சுதன் கூறுவதும் முரளி கூறுவது முன்னுக்குப்  பின் முரணாக இருப்பதால் இது பொய் சாட்சி என்பதை முடிவு செய்து கொண்டார் நீதிபதி. 


விசாரணைகள்  முடிவடைந்ததும்  சுதனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு சுதன் கூறிய  பதிலைகளும் அடங்கிய தட்டச்சு செய்யப்பட்ட பல பக்கங்கள்  கொண்ட தாள்களை தட்டச்சு செய்பவர்  எழுந்து வந்து சுதனிடம்  கொடுத்து "   வாசித்துப் பார்த்து கையொப்பம்  இடுங்கள்" என்றார்.


சுதனும் அனைத்தும் வாசித்து ஒப்பம்  இட்டுக் கொடுத்தான்.  நீதி மன்றம் கலைந்தது.


மறுநாள் பாதிக்கப்பட்ட  சுமதி தனது வழக்கறிஞருடன் நீதிமன்றில் ஒன்று கூடிய போது கூறப்பட்ட சாட்சி பொய்சாட்சி  என்று ஆதாரங்களுடன் உறுதி செய்தாள்  சுமதி.


போரில் காணாமல் போன  சுமதியின் கணவர் வந்திருப்பதாகவும்,  சுமதியின் கணவர்தான்  முரளி என்பதை உறுதிப்படுத்தும்  ஆவணங்களை  ஆயுத முனையில் மிரட்டி சுமதியின்  தாயாரிடம் பெறப்பட்டு  சுவிற்சர்லாந்தில்  குடியுரிமை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முரளியின்  நாடகத்தை  வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்த சுமதி  முரளி தனது கணவர் இல்லை என்பதையும் ஆதாரங்களுடன் உறுதிப் படுத்தினாள்.


முரளி  மன்னிக்கவே முடியாது அவனுக்கு சரியான தண்டனை வழங்கி நாடு கடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள்.


உண்மையில் சுதன் என்பவன் முரளியின் நண்பன் கிடையாது என்றும் சுதன் பணத்திற்காக  சாட்சியம்  அளித்தான்  என்ற உண்மையும் நீதிமன்றில்  ஆதாரங்களுடன் உறுதிபடுத்தினாள் சுமதி.


சுதன் கூறியது பொய் சாட்சி என்பதை உறுதிப்படுத்திய நீதிமன்றம் . 


பொய் சாட்சியளித்தால்  அதற்குரிய தண்டனை என்ன என்பதை  சுதனுக்கு  தெளிவு படுத்தியும் இருந்தும் சுதன் சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்டதை உறுதி செய்தது.


அதனால் பொய் சாட்சியளித்த குற்றத்திற்காக  

சம்மந்தப்பட்ட குற்றத்தின்  தண்டனைக் காலமாக குறைந்தது மூன்று வருட சிறையும் பாதிக்கப்பட்ட  சுமதிக்கு இருபது ஆயிரம் சுவிஸ்  பிராங்குகள்  செலுத்த வேண்டும் என்றும்  நீதிமன்றம் இருவருக்டும் தீர்ப்பு அளித்தது.


          *முற்றும்*


            ×+பூங்குழலி.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.