கொழும்பில் மரங்களுக்கான ஆபத்து!!

 


கொழும்பு மாநகரசபை நிர்வாக பிரதேசத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் 558 மரங்கள் காணப்படுவதாக மாநகரசபையின் ஆணையாளர் சந்திராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் ஆபத்தான நிலையில் 330 மரங்களே காணப்படுவதாக எமக்கு அறிக்கை கிடைத்திருந்தன.

எனினும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளுக்கு அமைய அந்த தொகை 558 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த மரங்களில் பல, 100 வருடங்களுக்கும் அதிக பழமை வாய்ந்தவை. 558 மரங்களில் 214 மரங்களை அகற்றுவதற்கு கொழும்பு மாநகர சபையின் தலையீட்டுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன

கடந்த சில மாதங்களாக கொழும்பு நகர் புறங்களின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.