தனித்தீவாக மாறிய திருச்செந்தூர்!!
தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருச்செந்தூரில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் தனித்தீவாக திருச்செந்தூர் மாறியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன .
வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்களில் செல்ல முடியாததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அதோடு திருச்செந்தூரில் மின்சாரம் இணைப்பு, தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் வதந்திகள் பரவுவதை தடுக்க ஒலிப்பெருக்கி மூலம் நடப்பு நிலவரத்தை அரசு தரப்பில் தெரிவிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லை மாவட்டம் கடல்போல காட்சி அளிக்கிறது.
கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் கோவை சூலூர், ராமநாதபுரத்தில் இருந்து நெல்லை வந்த ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேவேளை கடந்த வாரங்களில் சென்னையில் பெரும் வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும் வெள்ளத்தால் மக்கள் அல்லப்பட்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை