யுக்தியவால் முடக்கப்பட்ட சொத்துகள்!!

 


பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையின் ஊடாக 2938 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பொலிஸார் யுக்திய என்னும் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் வரையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களின் ஊடாக 2938.73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் 1427 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1370 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள், கட்டடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைப்பற்றப்பட்டுள்ள தங்கத்தின் மொத்த பெறுமதி 140.5 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.