விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்!
ரத்தை கொள்வனவு செய்வதற்காக பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 2 பில்லியன் ரூபா நிதி இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை 9 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு ஹெக்டேர் நெல்லுக்கு 15,000 ரூபா விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை