இரண்டாக தமிழரசுக்கட்சிகள் உடைந்து இருக்கிறது!


இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இன்று (28) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கமாக செயற்பட மாட்டார்கள். எங்களை பொறுத்த வரையில் நாங்கள் இணைய மாட்டாம் அது வேறு விடயம், ஆனால் மற்றைய கட்சிகள் இணைய வாய்ப்புக்கள் இருக்கலாம்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சிகள் இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது என சித்தார்த்தன் தெரிவித்தார்.



-யாழ். நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.