300 கிலோ இறைச்சிக்கு சீல்!


 கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்து நாள் உணவு கண்காட்சிக்காக உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட 300 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை சுகாதார திணைக்களம் எடுத்துச் சென்றுள்ளது.

குறித்த இறைச்சி இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதோடு சுகாதாரத் துறையின் முறையான அனுமதி இல்லாததாலும், இந்த இறைச்சியை வழங்கிய ஆங்கிலேய நிறுவனத்திடம் இருந்து மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதா என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இல்லாததாலும் இறைச்சியை விடுவிக்க சுகாதாரத்துறை மறுத்துள்ளது.

இருப்பினும், இந்த இறைச்சி கையிருப்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அதேசயம மாதிரிகளை பரிசோதிக்கும் வரை இறைச்சியை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி குளிர்பதன கிடங்குகளில் தனியாக வைக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் இறைச்சி கையிருப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை அடுத்த சில நாட்களில் வழங்கப்படும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் விஜித் குணசேகர விசாரணையில் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.