சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளர்!


 சம்மாந்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  இலங்கை கணக்காளர் சேவையைச் சேர்ந்த எஸ். எல் சர்தார் மிர்ஸா அவர்கள் இன்று(27) சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் டி. எம். எம். அன்சார், இறக்காமம் பிரதேச செயலாளர் எம். எஸ். எம் ரஸ்ஸான், சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ. எம் அஸ்லம், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ராஸீட் யஹியா, சம்மாந்துறை பிரதேச செயலக முன்னாள் கணக்காளர் ஐ. எம் பாரீஸ், அக்கரைப்பற்று பிரதித் திட்டமிடல் பணிப்பாளர். ஏ. எம் தமீம், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய கணக்காளர் ஏ. கே அஸ்கர் மற்றும் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ. எல் ஆகீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர் அக்கரைப்பற்று, தமன, காரைதீவு, அட்டாளைச்சேனை, இறக்காமம் போன்ற பிரதேச செயலகங்களில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.