யாழில் வீடு ஒன்று தீக்கிரை!

 


புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (26) இரவு 8:00 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.


அண்ணாமலை மகேந்திரன் என்பவரின் வீடே இவ்வாறு முற்று முழுதாக தீயில் கருகி உள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் தீப்பரவல் இடம் பெற்றுள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து சிறுக சிறுக சேமித்து காணி வாங்குவதற்காக வைத்திருந்த 800,000 ரூபா பணமும் தீயில் எரிந்துள்ளது .

சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் அது முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.

மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.