கிளிநொச்சியில் தொடர்பாடல் திறன்விருத்தி பயிற்சிப் பட்டறை!📷

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் சிறுவர் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தொடர்பாடல் திறன்விருத்தி பயிற்சிப் பட்டறை இன்று(27) நடைபெற்றது.
குறித்த பயிற்சிப் பட்டறை கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் வளவாளராக யாழ் போதனா வைத்தியசாலையின் மனநல நிபுணர் வைத்தியர் எஸ். சிவதாசன் கலந்து கொண்டார். இதற்கான நிதி அனுசரணையினை கிளிநொச்சி மாவட்ட உள நல சங்கம் வழங்கியது.
இதன்போது தொடர்பாடல் திறன்கள், மன ஆரோக்கியம், பிள்ளை வளர்ப்பு, ஒத்துணர்வு, பெண்களின் மனநல பிரச்னைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட உள நல சங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை