சூடை மீன் / மத்தி மீன் குழம்பு!!

 


தேவையான பொருட்கள்:

500 கிராம் சூடை மீன் / மத்தி மீன்

1 பெரிய வெங்காயம்

5 பல் உள்ளி

½ தே.க கடுகு

1 ½ தே.க பெருஞ்சீரகம் / சின்னச்சீரகம்

¾ தே.க வெந்தயம்

¼ கப் கறித்தூள் /இந்தியன் கறித்தூள்

½ கப் தேங்காய்ப்பால்

2 தே.க மிளகு  

உப்பு

கறிவேப்பிலை

எண்ணை

தண்ணீர்

புளி


செய்முறை: 

ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு மிதமான வெப்பத்தில் சூடாக்கவும். அதில் கடுகைப் போடவும். கடுகு பொரிந்து வெடிக்கும் பொழுது, வெங்காயம், ½ தே.க பெரும்சீரகம் / சின்னச்சீரகம், வெந்தயம் மற்றும் கருவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி கலர் மாறும் போது, கறித்தூள் சேர்த்து வதக்கவும். 


அதன் பின்பு புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் விட்டுக் கலந்து, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். உள்ளி மற்றும் மிளகை ஒன்று பாதியாக இடித்து வைக்கவும். தூள் பச்சை வாசனை போனதும், இடித்த உள்ளி மிளகு, மீன் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து, மூடி அவிய விடவும். அதன் பின்பு கறிவேப்பிலை பிய்த்துப் போட்டு, மற்றும் 1 தே.க பெருஞ்சீரகத்தை தட்டிப் போட்டு, ஒரு கொதி வர அடுப்பை அணைக்கவும்.


சுடச் சுட சோற்றுடன் / புட்டுடன் சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.


சூடை மீன் / மத்தி மீன் குழம்பு தயார்!!!


குறிப்பு:

உங்கள் சுவைக்கேற்ப பொருட்களின் அளவுகளை கூட்டுக் குறைக்கவும்.


மீன் கறிகளுக்கும் மற்றும் சொதிகளுக்கும் கடைசியாக பெருஞ்சீரகம் தட்டிப் போட்டால் நல்ல வாசமாகவும் சுவையாகவும் இருக்கும்.


காய்ந்த கறிவேப்பிலை சேர்த்ததால் முழு இலையாக சேர்த்தேன் (காய்ந்த இலையை பிய்க்கும் போது உருந்து விடும்), கறிவேப்பிலை பிய்த்து போட்டால் தான் வாசகமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.