பூநகர் பகுதியில் விபத்தில் சிக்கி பலியானார்!

 


மட்டக்களப்பு செங்கலடியை சேர்ந்த 22 வயது இளைஞர் திருகோணமலைக்கு சென்று திரும்பும் வழியில் பூநகர் பகுதியில் விபத்தில் சிக்கி பலியானார்



திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.



இன்று வியாழக்கிழமை (21) மாலை இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.


மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள் திருகோணமலைக்கு வந்து மீண்டும் மட்டக்களப்பு நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதிலேயே விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.



இவ்விபத்து சம்பவத்தில் மட்டக்களப்பு ,செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மதுசாந் வயது (22) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.