எரிபொருட்களின் விலை குறித்த அறிவிப்பு!!

 


மார்ச் மாதத்துக்கான எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி மாதாந்த விலை சூத்திரத்தின்படி, திருத்தம் செய்யப்பட்ட எரிபொருள் விலைகள் நேற்று வியாழக்கிழமை (29) இரவு அறிவிக்கப்பட இருந்தது.

இந்நிலையில் , இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலையை ஏற்கனவே இருந்த விலையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

அதேசமயம் , லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகியவை மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலையில் திருத்தம் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் இதுவரை  வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.