இந்திய,திராவிட சதியின் இன்னொரு அடையாளமாக சாந்தன் அண்ணா விதைக்கப்பட்டார்!
எந்த அடக்குமுறைக்கும் #இந்தஇனம் பணியாது என்பதை உறுதிசெய்ய இயற்கையானது சாந்தன் அண்ணையைப் பயன்படுத்தியிருக்கிறது.
2009 இல் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு இனப்படுகொலையின் பின்னர், விரல்விட்டு எண்ணத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக, சரித்திரமாக, வரலாறாக விதைக்கப்பட்டிருக்கிறார் சாந்தன் அவர்கள்.
இறுதிநேரத்தில்; சாந்தன் அண்ணாவின் இறுதிநிகழ்வை அப்படிச் செய்யவேண்டும், இப்படிச்செய்யவேண்டும் என பலதரப்பட்ட நண்பர்களின் அங்கலாய்ப்புகளை, செய்திகளைப் பரிமாறும் ஓர் நபராக நான் உணர்ந்தேன். எதையும் உறுதிசெய்யவியலாத, "நிகழ்நொடியில் நடப்பதைக் காண்தல்" என்பதன் அடிப்படையில் அமைதியாகவிருந்தோம். ஆனால் உலகத்தமிழர்கள் எதிர்பார்த்தது போல இந்நிகழ்வு இனத்தின் அறைகூவலாக மா(ற்)றப்பெற்றிருக்கிறது.
தனது மகனை, தனது சகோதரனை இழந்த பிறகு, இனி இதெல்லாம் எதற்கு என்ற எவ்வித நச்சரிப்புகளுமின்றி இந்நிகழ்வு எவ்வாறு நடந்தேற வேண்டுமோ அவ்வாறு நடந்தேற அனுமதித்த குடும்பத்தினரைத் தமிழினமாகத் தலைசாய்த்து வணங்குவோம்.
-தேவன்
கருத்துகள் இல்லை