சுற்றிவளைக்கப்பட்ட சூதாட்ட நிலையம்!!

 


திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சேவைத் துப்பாக்கி தவறுதலாக சுடப்பட்டதில் 28 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.


பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து திஸ்ஸமஹாராம காவற்துறையின் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவொன்று இன்று (31) அதிகாலை 01.00 மணியளவில் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் பல்வேறு திசைகளிலும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது, ​​பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கும், சந்தேக நபருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு, பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் சந்தேக நபர் காயமடைந்துள்ளார்.  

காயமடைந்த 28 வயதுடைய நபர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.