இ. போ. ச. விற்கு சினத்தை ஏற்படுத்திய இல்ல அலங்கரிப்பு!!

 


யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் இல்லவிளையாட்டு போட்டியில் பாரதி இல்லத்தின் இல்ல அலங்கரிப்பு பலரையும் கவர்ந்துள்ள நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபை கடும் கோபமடைந்துள்ளது. 

யாழ் நடேஸ்வரா கல்லூரி விளையாட்டுப் போட்டி அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது.

.இதில்,  பாரதி, வள்ளுவர், கம்பர் என மூன்று இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.

இதன்போது இல்ல அலங்கரிப்பில் இலங்கை போக்குவரத்து சபையினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் ஏற்படும் விபத்தினை தத்துரூபமாக காட்டும் விதமாக  அரச பேருந்து ஒன்று  நடைபாதையில் மாணவர் ஒருவரை மோதி தள்ளுவதை சித்தரிக்கும் முகமாக இல்லம் அமைத்திருந்த பாரதி இல்லம் அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்தது.


பொறுப்பற்ற சாரதிகளால் இவ் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை சுட்டிக்காட்டும் விதமாக இவ் இல்லம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இச் செயற்பாடு இலங்கை போக்குவரத்துசபையை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறப்பட்டு. இலங்கை போக்குவரத்துசபையின் யாழ் சாலை முகாமையாளரால்  வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.