இந்திய வல்லதிக்கத்தின் அடிமைகளா தமிழ் அரசியல்வாதிகள்?
இந்திய வல்லதிக்கத்தின் அடிமைகளா தமிழ் அரசியல்வாதிகள்?
-வி.எஸ்.சிவகரன்
உறவுகள் எப்போதும் நலனி யல் அடிப்படையிலும், தேவை யைத் தீர்த்துக் கொள்ளுதல் என்பதில் இருந்துதான் உருவா கும் என்பது நிதர்சனமான உண்மை. அதைத்தான் பொருள் முதல் வாத உறவு என்றார் மாக்ஸ்.
நாடுகளுக்கு இடையே இராஜ தந்திர-இராஜீக அணுகுமுறை என்பது கூட நலனியல் சார்ந் தவையே. உலகளாவிய துருவ அரசியலுக்குள்ளும் இதுவே முதன்மைப்படுகிறது.
இராஜதந்திரம் எனும் சொல்லுக்கு சாமானிய அர்த்தத்தில் "போக்கிலித்தனம்" என்றே வகைப் படுத்தலாம். படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதிகம் செய்வது. அதாவது முகத்துக்கு நேரே உண்மை பேசாமல் பின் னர் இரண்டக வேலை செய்வ தையே. நாகரிகமான சொல்லா டலில் தந்திரோபாயம் என விளிக் கின்றோம். இது, சமூகத்திற்குக் கேடு விளைவிக்குமே தவிர ஏற் றமோ மாற்றமோ நிகழ்வதில்லை. புராணங்கள் தொடக்கம் நவீனத் துவம் வரை சாணக்கியர்களே சான்றோர்கள் ஆகும் விதி தோற் றம் பெற்று பெரு வளர்ச்சி
பெற்றுவிட்டது. தற்போதைய மென்வலுவினு டைய அசுர வளர்ச்சியும், இதை நோக்கியே வேகமாக நகர்கிறது. ஆக மொத்தத்தில் உலகில் இனி அறம், சத்தியம், நீதி, சமூக சம நீதி, சமத்துவம் -இவை இனி ஏடுகளில் மாத்திரமே இறுகப் பற்றி இருக்கும் செயலற்ற சொற்க ளாகி விடும். இவை மதபீடங்க ளிலே கூட இல்லாத போது அரசி யலில் எதிர்பார்ப்பது தகுமா எனும் கேள்வி சாமானியமாக எழுவது
இயல்பானதே. அதனால்தான் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" எனும் நீதி நெறி வார்த்தை இன்றைய நவீன அரசி யலுக்கு பொருந்துகிறதா என்பது சந்தேகமாகின்றது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்திராகாந்தியின் பிராந்திய அரசியல் மோதலால், இந்திரா காந்தியால் தமது தேவைக்காக வடிவம் கொடுத்து வளர்க்கப் பட்டதுதான் ஆயுத குழுக்களின் உருவாக்கம், பின்னர் வளர்த்த கடா மார்பில் பாயது எனும் நிலை யும் அவர்களாலே உருவாக்கப் பட்டது.
அகிம்சையை போதிக்க வேண் டிய காந்திய தேசம் ஆயுதத்தைத் திணித்து, வன்முறையாளர்களாக சித்திரித்து, எம்மை ஏதிலிகள் ஆக்கியது மட்டுமல்ல. உலக அரங்கிலே எம்மைப் "பயங்கர வாதி" எனும் நிலையையும் தோற்றுவித்தது.
பயனற்ற பதின்மூன்றாவது திருத்தத்தால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதைக் கூட நடைமுறைப்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்கத் தயாரில் லாத இந்தியா,தமிழர் நலனில் அக்கறை செலுத்துவது போல் அவ்வப்போது நீலிக்கண்ணீர் வடிப்பதுண்டு. இதில் காங்கிர ஸூம், பாரதிய ஜனதாக் கட்சியும் ஒன்றுதான். இருவரும் சளைத்த வர்கள் இல்லை.
தனது பிராந்திய நலனுக்கு
ஆபத்து வந்துவிடும் என்பதால் தான் கள்ளக்காதல் கொள்வ நுண்டு. அதுவும் வடக்கு-கிழக்கு வளச்சுறண்டலுக்காக இதய பூர்வ- மாக இல்லை. இந்திய மீன வர் விவகாரமும் கூட அடக்குமுறை யின் வெளிப்பாடே இவர்களால் தான் அதிகம் போதைப் பொருள் களும் நாட்டிற்குள் வருகின்றன. தமிழ் அரசியல்வாதிகளில் அதிகமானவர்கள் இந்திய அடிமை விசுவாசிகள், அவர்களுக்குப் பல விதமான வர்த்தக - வாழ்வியல் நலனியல் தொடர்புகள் மிக நீண்ட காலமாக உள்ளது. அத னால்தான் இவர்கள் யாவரும் எஜமானின் நல்ல அடிமைகளாக சேவகம் செய்கிறார்கள்.
தமக்கு வாக்களித்தவர்களின்
நலனை விட இந்திய விசுவாசமே மேலானது என்பதை எப்போதும் நிரூபிப்பவர்கள். இதற்கு சிறந்த உதாரணம் ஜனாதிபதி தெரிவின் போது இந்தியத் தூதரத்தின் வேண்டுகையினால் டலஸுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தவர்கள் என்ற விடயம் வெளியே வந்தமை. அது பெரும் சர்ச்சைக்குள்ளகியது யாவரும் அறிந்ததே. ஓர் எலும் பிற்காக ஒரு நேர்மையான மனி தன் ஒரு போதும் தன்னை நாயாக் கிக் கொள்ள மாட்டான் என்கிறது ஒரு வியட்னாம் பழமொழி.
தற்போது அரசியல்வாதிகள் கடந்து காவியுடையின் ஊடாகவும் அது ஊடுருவியுள்ளது. அது மிக வும் ஆபத்தானது. ஈழத்தமிழர்களுக்கு "இந்துத்துவம்" எனும் கவசம் தமிழ்த் தேசியத்தையே சிதறடிக்கும். எமது விடுதலை உணர்வையும் தியாகத்தையும் மழுங்கடிக்கும். மதம் எப்போதும் தேசியத்திற்கு எதிரானது, நல்ல மதவாதி நல்ல தேசியவாதி ஆக முடியாது. நல்ல தேசியவாதி நல்ல மதவாதி ஆக முடியாது. மதம் என்பது அறிவற்ற உணர்வடிமை. அது வன்மத்தையும் அகங்காரத் தையுமே பிரதிபலித்து சமூகத்தை கூறு போடும். அதனால் தான் பெரியாரிஸத்தால் தமிழகத்திற் குள் மதவாத சக்திகள் காலூன்ற முடியாமல் தடுமாறுகிறது.கர்நா டகா தவிர்த்துத் தென்னகம் முழுவதும் இந்த நிலை தொடர்கி
இந்திய நலனில் உள்ள காசி ஆனந்தன் போன்றவர்கள் தாம் அடிமை சேவகம் புரிவது மாத் திரமன்றி, இந்து தமிழீழம் கேட் பால் இந்தியா ஆதரிக்கும் என்று ஏகபோக அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறார். இவர் மட்டு மல்ல. புத்திஜீவிகள் என்று தங்களைத் தாங்களே கூறித் திரியும் சிலரும், சில புலம் பெயர்ந்தவர்களும் இவ்விதமான கோமாளித்தனத்தில் ஈடுபடு கின்றனர். இதனால் எமக்கு கிடைத்த நலன் என்ன?
இலங்கை அரசு சீனாவுக்கு சார்பாக வெளிப்படையாகப் பல தடவைகள் இருந்த போதும் கூட கொழும்பு-டில்லி உறவில் பெரிய விரிசல் ஏற்படவில்லை. அரசுக்கும் அரசுக்கும்தான் உறவு என்பதில் அரசுகள் எப்போதும் தெளிவாக உள்ளன. அரசற்ற தரப்புக்களை கண்டு கொள்வதேயில்லை.
இதுவரை தமிழ்மக்களுக்கு உருப்படியாக இந்தியா உளப் பூர்வமாக என்ன செய்தது? முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் குக் கூட மிகவும் நெருக்கமான முறையில் உதவியது. 2009 மே மாதத்தில் மட்டும் பல தடவைகள் அன்றைய ஆட்சியாளர்களான பிரணாப் முகர்ஜி. எம்.கே.நாரா யணன், சிவசங்கர்மேனன் போன் றோர் அடிக்கடி கொழும்புக்கு வந்து இன அழிப்பு யுத்தத்தை தாமே நாடாத்துவது போல் இறுமாப்பு மகிழ்ச்சியடைந்தனர் என்பதை எவரும் மறந்து விட மாட்டார்கள்.
தமிழ் அரசியல்வாதிகள் இந் திய அடிமைகளாக இருக்கலாம். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில்
இந்திய எதிர்ப்புணர்வு ராஜ பக்ஷக்களுக்கு நிகராகவே உண்டு. ஏனெனில் இந்திய அமைதிப்படையின் அநியாயங் கள் இலகுவில் நினைவிழந்து விடுமா?
ராஜீவ் காந்தியை ஈழத்தமி ழர்கள் கொலை செய்தார்கள் எனும் வெறும் வாதத்தை வைத் துக் கொண்டு ஒரு இனத்தையே இந்தியா கொலை செய்தது என்று தமிழ் மக்களில் பலர் நம்புகி றார்கள் ஆனால் இந்திரா காந் தியைக் கொலை செய்த சீக்கிய இனத்தில் உள்ள மன்மோகன் சிங்கைப் பத்து ஆண்டுகள் பிரத மராக வைத்து அழகு பார்த் தார்கள். இதுதான் பாரதத்தின் பரிநிர்வாண நீதியோ...?
தற்போது யாழில் உள்ள துணைத்தூதரகம் தமிழ்மக்கள் மத்தியில் இந்திய சார்புநிலை மனோபாவத்தை வலுக்கட்டாய மாக விதைக்க முனைகிறது. சில நிரந்தர அடிமைகளை அவ்வப் போது அழைத்துச் சோறு கொடுக் கிறது. தானே கலாசார மண்ட பத்தை யாழில் கட்டி அது திறந்து பல மாதங்கள் கடந்தும் இன்னும் கையளிக்காமல் அதில் தாங்களே கூத்தாட்டமும் அவ்வப்போது நடாத் நுகின்றார்கள். இதுதான் அவர்க வின் தமிழர் நலன். அது மாத் திரமல்ல, விமான போக்குவரவு, மின் கட்டமைப்பு வசதிகள் என வடகிழக்கை தமது பிடிக்குள் அகப் படுத்தி வைத்திருக்கவே முயல்கிறது.
அவ்வப்போது அடிமைகளை அழைத்து சீனாவுக்கு எதிராகப் போவும் வைக்கிறார்கள். தற்போது இவர்களின் அடிமையாக வலம் வரும் ஒருவர் சில ஆண்டுக ளுக்கு முன்பே இந்தியாவை வழிப்படுத்த சீன - தமிழ் நட்புற வுச்சங்கம் தொடங்குவோம் என்று கூறியவர். எனவே அண்மை யில் நடந்த சாந்தனின் இறப்பு விடயத்தில் கூடவே வந்த இந் திய சட்டத்தரணி புகழேந்தி பகி ரங்கமாகமாகவே கூறினார் -அது மத்திய மாநில அரசுகளின் கொலை என்று. அது உண்மையும் கூட இவர்கள் நடந்து கொண்ட விதங்களில் அது தானாவே வெளிப்பட்டது.
சாந்தனுக்கு அஞ்சலி செலுத் துவதில் கூட பல்வேறு விதமான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்திய தாக அறிகிறோம். இந்திய அடி மைத் தமிழ்க்கட்சிகளின் பல அரசியல்வாதிகள் மட்டுமல்லர். இந் திய விசுவாசிகளும் கூட அவர்கள் போகவில்லை. கிழக்கு மாகா ணத்தவர்கள் எவரையும் காணக் கிடைக்கவில்லை.
வழமையாக தமிழ்த்தேசிய நிகழ்வுகளை வலிந்து தமது தலை யில் சுமக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கூட பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் நாடா ளுமன்ற உறுப்பினர்களாக வர முதல் இருந்த இந்திய எதிர்ப்பு நிலையின் அதி தீவிரத்தன்மை தற்போது நலிவடைந்து விட்டது. தமிழரசுக்கட்சியில் சிறிதரன் - சார்ள்ஸைத் தவிர வேறு எவரும் போனவர்களாகத் தெரியவில்லை. ஆயுதக்குழுக்கள் எவரையும் காணவில்லை.
பல்கலை மாணவருக்கும் பல இடர்ப்பாடுகள் இருந்ததாகக் கேள்வி. குறைந்த பட்சம் தமது அலுவலகங்களில் கூட அஞ்சலி செலுத்தவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புக்கள் கூட ஓர் அறிக்கையோ அஞ்ச லியோ செலுத்தியதாகத் தெரிய வில்லை. மரணத்தில் கூட அரசி யல் நோக்குநிலை தேடுபவர்கள் தான் தமிழ்த்தேசியவாதிகளாம். சுய உணர்வற்ற அடிமைகள். ஆனாலும் மக்கள் இவர்களுக்கு மாறாக பெரும் உணர்ச்சிப் பிரவா கத்தையே வெளிப்படுத்தினார்கள். இதில் இருந்தாவதும் அடிமை அரசியல்வாதிகளும் இந்தியாவும் புறிந்து கொள்ள வேண்டும்- மக் களின் உண்மையான உணர்வு களை.
ஆகவே இத்தியா இலங்கை அரசின் பக்கமே தவிர, பாதிக்கப் பட்ட தமிழ்மக்களின் பக்கம் ஒரு போதும் இருந்ததில்லை. ஏனெ னில் தமிழர்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தியதில் இந் தியாவுக்கும் பெரும் பங்குண்டு. இனப்பிரச்சினைக்குத் தீர்வு பதின் மூன்றாவது திருத்தம் என்றார்கள். தற்போது பொருளாதார நெருக்கடி தீர்ந்தால் சரியாகும் என்கின் றார்கள். ஆகவே இந்தியாவை விட ஆபத்தானவர்கள் இந்திய அடிமைகளே. அவர்களை முத லில் தமிழ்மக்கள் அரசியல் அரங்கில் இருந்து அகற்ற வேண் டும். இதயசுத்தியோடு எதுமே செய்யாத இந்தியாவை ஏன் தான் இவர்கள் தாங்கிப் பிடிக்கிறார் களோ தெரியவில்லை. யாவும் டெல்லிக்கே வெளிச்சம்....!
கருத்துகள் இல்லை