பாடசாலை மாணவர் மீது தாக்குதல்!


திவுலப்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தாய் தெரிவிக்கையில்,

சந்தேக நபரால் தனது மகன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சந்தேக நபரை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி பாடசாலை முடிந்து மாணவன் பாதுராகொட நகரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருந்த போது சந்தேக நபரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கபபட்ட மாணவன் பாதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவராவார்.

அதேவேளை மாணவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் திவுலப்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.