பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜனாதிபதி சிறந்தவர்!

 


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரையில் பெற்றுள்ள முன்னேற்றங்கள் உறுதிப்படுத்துவதாகவும், எனவே அவரது தலைமைத்துவத்தில் நாடு முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.


இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வைத்து நாட்டை யாராலும் ஆள முடியும் என சிலர் நம்பத் தூண்டுவதாகவும் ஆனால் அது சரியானதல்ல எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.