அமைச்சர் பாலித காலமானார்!


முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும இன்று பிற்பகல் காலமானார். அவரது உடல் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


64 வயதுடைய பாலித்த தெவரப்பெரும ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார் . 2020 ஆம் ஆண்டு வரை அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.


2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அவர் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.


அவரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படுமென குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.