சுவிஸ் பெண்ணை ஏமாற்றிய யாழ்.பொலிஸ் தலைமறைவு!


 சுவிஸ் பெண்ணிடம் 60 இலட்சம் ரூபா பணம் மற்றும் நிறைய தங்கத்தை ஏமாற்றிய யாழ்.பொலிஸில் பணிபுரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தை சேர்த யுவதி ஒருவர் சுவிட்சர்லாந்திற்குச் சென்று அங்கு வசிக்கும் போது அவரது சில சொத்துக்கள் அவரது குடும்ப உறுப்பினர்களால் இரகசியமாகவும் மோசடியாகவும் கைமாற்றப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த புகாரை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து , சில காலத்தின் பின்னர் யாழ் பொலிஸ் உத்தியோகத்தர் சுவிஸ் பெண்ணிடம் பல்வேறு தேவைகளை காரணம் காட்டி கடனாக பணம் பெற்றுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவர் வழங்கிய கடன் தொகை 60 இலட்சம் ரூபா, இதற்கு மேலதிகமாக காதலனுக்கு பரிசுப் பொருட்களுக்கு என அதிக பணத்தை செலவிட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர் தனது தொலைபேசி இலக்கத்தை மாற்றியதை அடுத்து பணத்தை பெறுவதற்காக யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் பெண் , தான் ஏமாற்றப்பட்டமை தொடர்பில் யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையி, பெண்ணின் முறைப்பாட்டுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.