கோபி மசாலா செய்வது எப்படி??


தேவையான பொருள்கள்
:


காலிஃப்ளவர் - பெரிய பூவாக ஒன்று


வெங்காயம் - 4


தக்காளி - 3


மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

வரமிளகாய் - 4


தாளிக்க - கடுகு, உளுந்து, தட்டிய பூண்டு, கடலைப்பருப்பு

அரைப்பதற்கு


தேங்காய் - கால் மூடி


நிலக்கடலை - 2 கைப்பிடி


தனியா - ஒரு கைப்பிடி


மிளகு - அரை தேக்கரண்டி


வர மிளகாய் - 6


பூண்டு -ஒன்று


பட்டை - ஒரு துண்டு


கிராம்பு - 4


செய்முறை


🎄    அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய், பூண்டு தவிர அனைத்தையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.


🎄    நிலக்கடலையை தோல் நீக்கி நீர் சேர்த்து மைப்போல் அரைத்துக்கொள்ளவும்.


🎄    வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.


🎄   காலிஃப்ளவரில் ஒவ்வொரு பூவாக பிரித்து வெந்நீரில் 5 நிமிடம் வைக்கவும்.


🎄   அரைப்பதற்கு கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


🎄    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்துக்கொள்ளவும்.


🎄   பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்


🎄    அதில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிய கிளறவும்.


🎄    பின் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி தேவைக்கு நீர் சேர்த்து வேக விடவும்.


🎄    கிரேவி பதத்தில் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.


🎄    சுவையான கோபி மசாலா தயார்.


🎄   சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்தும், வெறும் சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.