நடிகர் சல்மான் வீட்டுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

 


இந்தியாவின் பிரபல நடிகரான சல்மான்கான் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இச் சம்பவம் தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றையதினம் (14-04-2024) அதிகாலை சல்மான்கான் வீட்டு முன்னால் மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.


சத்தம் கேட்டு உடனடியாக வீட்டிலிருந்த பாதுகாப்பாளர்கள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைந்து வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.