சிட்னியில் நடந்த பயங்கரம்!

 



அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள கிறிஸ்தவ தேவலயமொன்றில் இன்று  மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவைகள் கத்தியால் குத்தியதாகவும், அதன் பின்னர் அங்கிருந்த மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேவலயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதேவேளை சிட்னியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்ட  நபரொருவர்  வணிக வளாகமொன்றில் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.