விவாகரத்து மனுத் தாக்கல் செய்த தனுஷ், ஐஸ்வர்யா!!

 


நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.


கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் அவர்கள் கோரியுள்ளனர்.


இந்நிலையில் குறித்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 ஆம் திகதி நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்துகெண்டனர்.


அதன் பின்னர் இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி அறிவித்தனர்.


இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.