பிரபல்யமடைந்துள்ள முன்னாள் போராளி!

 


சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள முன்னாள் போராளி தன் உயரத்தின் காரணமாக பிரபலயமடைந்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கைவேலி கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியும், இரு பிள்ளைகளின் தந்தையுமான குணசிங்கம் கசேந்திரன் 07 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர்.


இலங்கையின் மிக உயரமான நபர் தாம் என நம்புவதாக அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். அதோடு தனது உயரம் காரணமாக தாம் எதிர்கொண்ட சூழ்நிலைகள் மற்றும் சமூகத்தில் தனக்கு கிடைத்த எதிர்வினைகள் குறித்து  தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு  தெரிவித்திருந்தார்.


“நான் உயரமாக இருப்பதால் இங்குள்ள செருப்புகளை பயன்படுத்த முடியாது. அவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். முச்சக்கர வண்டி சாரதியாக இருப்பதால்,சிரமமாக உள்ளது என்கிறார். அதற்குக் காரணம் அவருடைய உயரம்.


இந்த உயரத்தினால் பேருந்துகளில் பயணிக்கும் போது தான் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாவும் அவர் கூறியுள்ளார். பேருந்தில் நிற்க முடியாது, ஆசனத்தில் உட்காருவதும் சிரமமாக இருப்பதாக குணசிங்கம் கசேந்திரன் கூறுகிறார்.


மேலும் தாம் வாழும் பிரதேசங்களில் தனக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் சிங்களப் பிரதேசங்களில் தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.