ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா?


✍️ அடுக்களையில்  குந்தியவள்.

      அடுத்தவருக்காய் ரத்தம் சிந்தியவள். 


✍️ பாத்திரங்கள் மினுக்கியவள்.

      பாத்திருக்க பகையை நொறுக்கியவள். 


✍️விடுதலையின்றி ஏங்கியவள்.

     சுடுகலனை கையில் ஏந்தியவள்.


✍️கவலையில் விழி வாடியவள்.

     கடலில் சுழி ஓடியவள். 


✍️இயந்திரமாய் இருந்தவள்.

     சுதந்திரமாய்ப் பறந்தவள்.


✍️கடும் சட்டங்களால்  துடித்தவள்.

     கரும்புலியாக வெடித்தவள்.


✍️புறநானூற்றை மேவியவள்.

     பிறநாட்டுடன் மோதியவள். 


✍️புலிவடிவாக  சீறியவள்.

     புயல் மழையாக மாறியவள்.


🍁பூவாக மலர்ந்தவள்.

👍புது வரலாறாக நிமிர்ந்தவள்.❗ 


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.