ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா?
✍️ அடுக்களையில் குந்தியவள்.
அடுத்தவருக்காய் ரத்தம் சிந்தியவள்.
✍️ பாத்திரங்கள் மினுக்கியவள்.
பாத்திருக்க பகையை நொறுக்கியவள்.
✍️விடுதலையின்றி ஏங்கியவள்.
சுடுகலனை கையில் ஏந்தியவள்.
✍️கவலையில் விழி வாடியவள்.
கடலில் சுழி ஓடியவள்.
✍️இயந்திரமாய் இருந்தவள்.
சுதந்திரமாய்ப் பறந்தவள்.
✍️கடும் சட்டங்களால் துடித்தவள்.
கரும்புலியாக வெடித்தவள்.
✍️புறநானூற்றை மேவியவள்.
பிறநாட்டுடன் மோதியவள்.
✍️புலிவடிவாக சீறியவள்.
புயல் மழையாக மாறியவள்.
🍁பூவாக மலர்ந்தவள்.
👍புது வரலாறாக நிமிர்ந்தவள்.❗
-பிறேமா(எழில்)-
கருத்துகள் இல்லை