15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு-விம்பிள்டன்,பிரித்தானியா!

 தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டு இன்று லண்டனில் விம்பிள்டன் பகுயியில் அனைத்துலக தொடர்பக வழிகாட்டலுக்கு அமைய பிரித்தானியர் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.


தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைவரலாற்றில் இவர்களது வீரவரலாறும் பதியம்பெற்று, எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச்செல்லப்பட்டு, இம்மாவீரர்களின் இலட்சியத்தை நாமும் சுமந்து தமிழீழம் விடுதலையடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியுடன் இன்றைய நாளில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களான, வீரவேங்கை ஜெமிலன்,வீரவேங்கை இளஞ்செழியன்,வீரவேங்கை கலைமகன்,வீரவேங்கை கவிதா,வீரவேங்கை தேவதாஸ், வீரவேங்கை சுரதன்,வீரவேங்கை சேரன்,வீரவேங்கை காந்தா/அவிர்,வீரவேங்கை யோகநாதன்,வீரவேங்கை நரேன்,வீரவேங்கை நிரஞ்சினி,வீரவேங்கை முகுலினி,வீரவேங்கை மொழித்தேவன்,வீரவேங்கை முரளி மற்றும் வீரவேங்கை பேரம்மான்.

இன்றய நிகழ்வில் பொதுசுடரினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டு கழக செயற்பாட்டாளர் திருமதி வாசுகி கிருஷ்ணகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.


தமிழீழ தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தென்மேற்க்கு பிராந்தியப் பொறுப்பாளர் திரு வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.


தொடர்ந்து தமிழீழ தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு 15 வீரவேங்கைகளின் திரு உருவப்படங்களிற்கு ஈகைசுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர் நினைவு தாங்கிய உரையினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு நியூட்டன் அவர்கள் வழங்கினார்.


15 வீரவேங்கைகளுக்கான தமிழீழ தேசியக்கொடிகளை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு ஆனந்தன் அவர்கள் மாவீரர் குடும்பங்கள்/ உறவுகளுக்கு கையளித்தார்கள்.மாவீரர்களின் கனவுகள் நினைவாக பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.